'டிரபிக்' காரணத்தால் வர முடியவில்லை: விமல் விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 20 March 2018

'டிரபிக்' காரணத்தால் வர முடியவில்லை: விமல் விளக்கம்!


வழக்கு விசாரணைக்கு  சமூகமளிக்காத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் வாகன நெரிசல் அதிகமாக இருந்ததனாலேயே தன்னால் வர முடியாமல் போனதாக நீதிமன்றுக்கு விளக்கமளித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்தபோது சட்டவிரோத ஆர்ப்பாட்டம் நடாத்தி போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடைஞ்சல் விளைவித்ததன் பின்னணியில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கத் தவறிய விமல் மற்றும் அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அவ்வழக்குக்கு தற்போது ஆஜராகி விமல் வீரவன்ச விளக்கமளித்துள்ள நிலையில் இனி வரும் காலங்களில் காரணம் சொல்லாது குறித்த நேரத்துக்கு ஆஜராக வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment