எரிபொருள் இல்லாவிட்டால் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு: CEB - sonakar.com

Post Top Ad

Tuesday 18 January 2022

எரிபொருள் இல்லாவிட்டால் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு: CEB



களனிதிஸ்ஸ மற்றும் சப்புகஸ்கந்த நிலையங்களுக்குத் தேவையான போதிய எரிபொருள்  கிடைக்கப் பெறாவிட்டால் தினசரி ஒன்றரை மணி நேர மின் வெட்டு அமுலுக்கு வரும் என எச்சரிக்கிறது இலங்கை மின்சார சபை.


இன்றைய தினத்துக்குள் எரிபொருள் கிடைக்காவிட்டால் மின் வெட்டு நேர அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, டொலர் தந்தால் மாத்திரமே எரிபொருளை இறக்குமதி செய்து தர முடியும் என அமைச்சர் கம்மன்பில ஏலவே பகிரங்கமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment