சி.ஐ.டியில் முதலாவது பெண் பிரதி பணிப்பாளர் நியமனம் - sonakar.com

Post Top Ad

Friday 11 June 2021

சி.ஐ.டியில் முதலாவது பெண் பிரதி பணிப்பாளர் நியமனம்

 


ஸ்ரீலங்கா பொலிசின் குற்றவியல் விசாரணைப் பிரிவின் முதலாவது பெண் பிரதிப் பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.


எஸ்.எஸ்.பி இமேஷா முதுமாலவே இவ்வாறு முதலாவது நியமனத்தைப் பெற்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்.


சட்டத்துறை மற்றும் விஞ்ஞானத்துறையில் தனது உயர் கல்வியை நிறைவு செய்த அவர், பல வெளிநாட்டுப் பயிற்சி முகாம்களிலும் இலங்கை சார்பாக கலந்து கொண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment