நாளை முதல் இரவில் போக்குவரத்து கட்டுப்பாடு - sonakar.com

Post Top Ad

Sunday 16 May 2021

நாளை முதல் இரவில் போக்குவரத்து கட்டுப்பாடு

 



தற்போது அமுலில் இருக்கும் நாடளாவிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் நாளை காலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது.


எனினும், எதிர்வரும் 31ம் திகதி வரை இரவு 11 முதல் காலை 4 மணி வரையான காலப்பகுதியில் ஏலவே அறிவித்தது போன்று போக்குவரத்து கட்டுப்பாடு தொடரும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.


இந்த வார இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இனவாத நோக்கம் கொண்டவை என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment