ஓட்டமாவடியில் ஜனாஸாக்கள் நல்லடக்கம்! - sonakar.com

Post Top Ad

Friday 5 March 2021

ஓட்டமாவடியில் ஜனாஸாக்கள் நல்லடக்கம்!

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் ஜனாஸாக்களை கட்டாயமாக எரிக்கும் நடைமுறையைக் கைவிட்டிருந்த இலங்கையரசு இன்று ஓட்டமாவடியில் அடக்கத்துக்கான பணிகளை முன்னெடுத்துள்ளது.


இப்பின்னணியில் அட்டாளைச்சேனை ஒருவர், காத்தானகுடி ஒருவர், அக்கறைப்பற்று ஒருவர்,  சாய்ந்தமருது மூன்று, கோட்டமுனை ஒன்று, ஏறாவூர் இரண்டுமாக மொத்தம் ஒன்பது ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.


காலையில் குறித்த இடத்தினை பார்வையிட்ட அதிகாரிகள் பி.பகல் பலத்த பாதுகாப்புடன் ஜனாஸா நல்லடக்கத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment