சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கொரோனா தொற்றிருப்பதனால் அவரை இன்று நீதிமன்றுக்கு அழைத்துவரவில்லையென விளக்கமளித்துள்ளது குற்றப்புலனாய்வுப் பிரிவு.
ஏலவே ஹிஜாசை சட்டத்தரணிகள் பார்ப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லையென சர்ச்சையெழுந்துள்ள நிலையில் இன்றைய தினம் 2 மணியளவில் நீதிமன்றுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஹிஜாஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதனால் அழைத்துவரப்படவில்லையென இன்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment