ஜனாஸா எரிப்பு: இலங்கை உயர்ஸ்தானிகருடன் UK பேச்சு - sonakar.com

Post Top Ad

Wednesday 23 December 2020

ஜனாஸா எரிப்பு: இலங்கை உயர்ஸ்தானிகருடன் UK பேச்சு

 


இலங்கையில் தொடரும் கட்டாய ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில் மனித தெற்காசிய மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சர் தாரிக் அஹமத் இலங்கை உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.


புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தினர் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் விவகாரங்களும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்திலிருந்து விலகிக் கொண்டுள்ள விவகாரமும் அங்கு நாடாளுமன்றிலும் விவாதிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையிலேயே நேரடியாக ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கை உயர்ஸ்தானிகருடன் தாம் பேச்சுவார்த்தை நடாத்தியதாக தாரிக் அஹமத் தகவல் வெளியிட்டுள்ளதுடன் அது 'ஆரோக்கியமாக' இடம்பெற்றதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது (சோனகர்.கொம்).

No comments:

Post a Comment