இரு தனியார் வைத்தியசாலைகளின் மேற்பார்வையில் சிறிய அளவிலான கொரோனா சிகிச்சை நிலையங்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் இராணுவ தளபதி.
நவலோக மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனங்கள் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் இடம்பெறவுள்ளதோடு, ஹோட்டல்கள் சில சிகிச்சை நிலையங்களாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் மாதம் முதல் இதுவரை இலங்கையில் 34737 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment