பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி வெயங்கொட பகுதியில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியின் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்கி வந்த ஒருவரைக் கத்தியால் குத்திய விவகாரத்தின் பின்னணியில் கைது செய்ய முயன்ற போது, சந்தேக நபர் தப்பியோடியதாகவும் இதன் போது சுடப்பட்டதாகவும் பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment