பொலிஸ் பேச்சாளர் 'மாற்றம்': மீண்டும் அஜித் ரோஹன - sonakar.com

Post Top Ad

Wednesday 7 October 2020

பொலிஸ் பேச்சாளர் 'மாற்றம்': மீண்டும் அஜித் ரோஹன



ரியாஜ் பதியுதீன் கைது, தீவிரவாத தொடர்பு மற்றும் விடுதலை தொடர்பில் பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களை வெளியிட்டிருந்த பொலிஸ் பேச்சாளர் எஸ்.எஸ்.பி ஜாலிய சேனாரத்ன அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், மீண்டும் டி.ஐ.ஜி அஜித் ரோஹான அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜாலிய சேனாரத்னவின் கூற்றுக்கள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அரசியல் மட்டத்திலும் பல்வேறு விமர்சனம் வெளியிடப்பட்டு வந்த நிலையில் இம்மாற்றம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment