நீலக்கல் புத்தர் சிலை விற்க முனைந்த நால்வர் கைது - sonakar.com

Post Top Ad

Monday 5 October 2020

நீலக்கல் புத்தர் சிலை விற்க முனைந்த நால்வர் கைது

 


நீல நிற இரத்தினக்கல்லில் 2 அங்குலத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலையொன்றை விற்க முனைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு மொனராகலயில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


6 பில்லியன் ரூபாவுக்கு குறித்த கலை வடிவத்தை விற்க முனைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அநுராதபுர மற்றும் பேராதெனியவைச் சேர்ந்த 20 முதல் 40 வயது வரையான நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


2 அங்குலத்தில் செதுக்கப்பட்டுள்ள குறித்த சிலையை கும்புக்கன பகுதியில் விற்பதற்கு ஏற்படாகியிருந்தமை குறித்து தகவல் கிடைத்ததன் பின்னணியில் சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment