நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு - sonakar.com

Post Top Ad

Wednesday 28 October 2020

நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு

 


நாளை (29) நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை 2ம திகதி காலை 5 மணி வரை மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்னும் 'சமூக மட்டத்திலான' ஆபத்து இல்லையெனவே அரசாங்கம் தெரிவித்து வருகிறது.


இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேல் மாகாணம் முழுவதும் இவ்வாறு ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்சமயம் அமுலில் உள்ள பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment