வெளிநாட்டிலிருந்து அழைத்து வரும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Monday 12 October 2020

வெளிநாட்டிலிருந்து அழைத்து வரும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

  


வெளிநாடுகளில் தொழில்வாய்ப்புக்காக சென்று நாடு திரும்புவதற்காகக் காத்திருப்போரை அழைத்து வரும் பணிகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.


நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் வைத்தியசாலை, தனிமைப்படுத்தல் முகாம்களில் இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களினால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


மேலும் 57,000 பேர் நாடு திரும்புவதற்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment