நீதியமைச்சில் தொழில் என நம்பி பல இளைஞர்கள் ஏமாற்றம்! - sonakar.com

Post Top Ad

Wednesday 30 September 2020

நீதியமைச்சில் தொழில் என நம்பி பல இளைஞர்கள் ஏமாற்றம்!

 


நீதியமைச்சில் தொழில் வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக போலிக் கடிதம் ஒன்றுடன் அமைச்சுக்கு நேற்றும் இன்றும் பல இளைஞர்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


சுமார் 45 இளைஞர்கள் இவ்வாறு சென்றுள்ளதுடன் 17,500 ரூபா முதல் 185,000 ரூபா வரை 'சமந்த' என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் தொலைபேசியூடாக ஏமாற்றியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் அமைச்சு விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் அவ்வாறு எதுவித ஏற்பாடும் அமைச்சில் இல்லையென இளைஞர்களைத் திருப்பியனுப்பியுள்ளமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment