எங்கள் பிரார்த்தனை நிறைவேறி விட்டது: ஞானசார பெருமிதம்! - sonakar.com

Post Top Ad

Thursday 13 August 2020

எங்கள் பிரார்த்தனை நிறைவேறி விட்டது: ஞானசார பெருமிதம்!


தனிச் சிங்கள அரசொன்று அமைய வேண்டும் என 2014ல் தாம் மேற்கொண்ட பிரார்த்தனை நிறைவேறியுள்ளதாக தெரிவிக்கிறார் ஞானசார.


அதிகாரத்துக்காக யாருடனும் தொங்கிக் கொண்டிருக்காது உறுதியான சிங்கள தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற தமது முயற்சிக்கு இன்று பலன் கிடைத்திருப்பதாகவும் அதைக் கொண்டு மக்கள் மகிழ்வடைய வேண்டும் எனவும் ஞானசார மேலும் தெரிவிக்கிறார்.


இதேவேளை, தமது கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் திருடப்படும் என தாம் கனவிலும் நினைக்கவில்லையெனவும் ஞானசார கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment