அலி சப்ரிக்கு நீதியமைச்சு? பெரமுன ஆதரவாளர்கள் அதிருப்தி! - sonakar.com

Post Top Ad

Sunday 9 August 2020

அலி சப்ரிக்கு நீதியமைச்சு? பெரமுன ஆதரவாளர்கள் அதிருப்தி!

தேசியப் பட்டியல் ஊடாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள அலி சப்ரிக்கு நீதியமைச்சும் வழங்கப்படவுள்ளதாக பெரமுன சார்பு செய்தித்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டு அது சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.


குறித்த அமைச்சை அலி சப்ரிக்கு வழங்கக்கூடாது எனவும் அது விஜேதாச ராஜபக்சவுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் வெளியிடப்படுகின்ற அதேவேளை சமூக வலைத்தளங்களில் வாதிக்கப்படும் குறித்த விடயத்தினை கட்சி முக்கியஸ்த்தர்களுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாக விமல் வீரவன்ச தரப்பு தெரிவிக்கிறது.


2012 ஞானசாரவின் எழுச்சி முதல் 2014 அளுத்கம வன்முறை வரை ரவுப் ஹக்கீமே நீதியமைச்சராக பதவியில் இருந்தமை நினைவூட்டத்தக்கது.

1 comment:

Roshan said...

Enough. Please mislead the Muslim community. We have a strong leader GR he knows what to do. Our deal politicians are trying in vein to show that there are problems within SLPP. Good luck for our new government.

Post a Comment