தேசப்பற்றினாலேயே 'கோட்டாபே'யுடன் சேர்ந்தேன்: அலி சப்ரி - sonakar.com

Post Top Ad

Monday 10 August 2020

தேசப்பற்றினாலேயே 'கோட்டாபே'யுடன் சேர்ந்தேன்: அலி சப்ரி

தேசப்பற்றினாலேயே, யுத்தத்தை நிறைவு செய்ய முடியும் என திடமாக நம்பிக் கொண்டிருந்த கோட்டாபே ராஜபக்சவுடன் தான் இணைந்ததாக தெரிவிக்கிறார் ஜனரிபதி சட்டத்தரணி அலி சப்ரி.


கோட்டாபே ராஜபக்சவுக்கு சிக்கல்கள் வந்த போதும், அவருக்கு எதிரான சட்ட ரீதியான சவால்கள் வந்த போதும் தான் கட்டணம் பெறாது தொடர்ச்சியாக ஆதரவளித்து வந்ததும் வழக்காடியதும் அவர் மீதிருந்த நம்பிக்கை மற்றும் தேசத்தில் நிலவிய யுத்தத்தை முடித்து மக்களை நிம்மதியாக வாழ வைத்த அவருக்கா நன்றிக்கடனுக்காகவுமே என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


நீண்டகாலமாக மஹிந்த அணியூடாக அரசியல் அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த அலி சப்ரிக்கு இம்முறை தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment