மாத்தளை பெரமுன வேட்பாளர்களுக்கு வந்த சோதனை - sonakar.com

Post Top Ad

Saturday 1 August 2020

மாத்தளை பெரமுன வேட்பாளர்களுக்கு வந்த சோதனை


மாத்தளை மாவட்டத்தில் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கட்சிக் கடிதத் தலைப்பில் தகவல் பரவி வரும் நிலையில் அதனை மறுத்துள்ளது பொதுஜன பெரமுன.

குறித்த கடிதம் போலியானது எனவும் தாம் அவ்வாறு எதையும் வெளியிடவில்லையெனவும் அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிக்கிறார்.

பலருக்கு இக்கடிதம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment