குசல் மென்டிஸ் பிணையில் விடுதலை - sonakar.com

Post Top Ad

Monday 6 July 2020

குசல் மென்டிஸ் பிணையில் விடுதலை


வாகனத்தால் மோதி 64 வயது நபர் ஒருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த தேசிய கிரிக்கட் வீரர் குசல் மென்டிசுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாணந்துறை பகுதியில் குசாலின் வாகனம் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வயோதிபர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில், இழப்பீடாக 1 மில்லியன் ரூபா தருவதாக கூறிய குசல் தரப்பினர் இன்று முற்பணமாக 2 லட்ச ரூபா வழங்கியுள்ளனர்.

இப்பின்னணியில், தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment