குருநாகல் மேயரை கைது செய்யக் கோரி மனு - sonakar.com

Post Top Ad

Tuesday 28 July 2020

குருநாகல் மேயரை கைது செய்யக் கோரி மனு


குருநாகலில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அரச மண்டபத்தை இடித்ததன் பின்னணியில் குருநாகல் மேயரை கைது செய்யுமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் என நம்பப்படும் குறித்த இடம் இடிக்கப்பட்டதையடுத்து உருவான எதிர்ப்பின் மத்தியில் அம்மன்னனுக்கு முஸ்லிம் மனைவியொருவரும் இருந்ததாக மஹிந்த ராஜபக்ச நியாயப்படுத்த முனைந்திருந்தார்.

இதேவேளை, குறித்த இடம் மன்னனுடையதில்லை 1800களில் யாரோ புவனேகபாகு என்ற பெயர் கொண்டவரால் பதியப்பட்டது என பெரமுன சார்பு பிக்குகளும் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment