கொரோனா: மத்திய கிழக்கில் 35 இலங்கையர் உயிரிழந்துள்ளனர் - sonakar.com

Post Top Ad

Thursday 9 July 2020

கொரோனா: மத்திய கிழக்கில் 35 இலங்கையர் உயிரிழந்துள்ளனர்


கொரோனா தொற்றுக்குள்ளாகி மத்தியகிழக்கு நாடுகளில் இதுவரை 35 இலங்கையர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சவுதி, கட்டார், குவைத், ஒமான், லெபனான் மற்றும் அமீரகம் போன்ற நாடுகளில் இவ்வாறு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விளக்கமளித்துள்ளது.

இறுதி 3 வாரங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment