விமான நிலையத்தை முன் கூட்டியே திறக்க முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Sunday 14 June 2020

விமான நிலையத்தை முன் கூட்டியே திறக்க முஸ்தீபு


ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்பாகவே விமான நிலையத்தைத் திறப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.

வெளிநாடுகளில் முடங்கியிருக்கும் இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் முழுமை பெற்றதும் விமான நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

இதுவரை 10,000 பேர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ள போதிலும் மேலும் 20,000 பேர் வரை காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment