இரு வாரங்களில் 25,912 பேரைக் கைது செய்துள்ள பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Sunday 21 June 2020

இரு வாரங்களில் 25,912 பேரைக் கைது செய்துள்ள பொலிஸ்!


ஜுன் 6ம் திகதி முதல் 20ம் திகதி நள்ளிரவு வரையான காலப்பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பின்னணியில் 25,912 பேரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.

போதைப்பொருள், சட்டவிரோத ஆயுதம், வெடிமருந்துகள் கையிருப்பு மற்றும் பிடியாணை உள்ள 5,110 பேர் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதில் 6420 பேர் போதைப் பொருள் வைத்திருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment