முஸ்லிம் சமூகம் நவீனப்படுத்தப்பட வேண்டும்: அலி சப்ரி - sonakar.com

Post Top Ad

Monday 18 May 2020

முஸ்லிம் சமூகம் நவீனப்படுத்தப்பட வேண்டும்: அலி சப்ரி


இலங்கை முஸ்லிம் சமூகம் தமது சிந்தனை வட்டத்திலிருந்து வெளியேறி நவீனப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி.

இன்றைய தினம் சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பாலுடன் எமது பேஸ்புக் தளத்தில் இடம்பெற்ற நேரலையின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், எதிர்கால சமூகத்தின் நன்மை கருதி புத்திஜீவிகள், சமூகப் பிரமுகர்கள் கொண்ட புதிய கட்டமைப்பொன்று அவசியப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் தற்போது இடம்பெறும் 'மருத்துவ' பிழைகள் மற்றும் கருத்துக்களால் முஸ்லிம் சமூகம் மாத்திரம் பாதிக்கப்படவில்லையெனவும் ஒட்டுமொத்த விவகாரத்தை முஸ்லிம் கண் கொண்டு மாத்திரம் பார்க்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேரலை நிகழ்வின் ஒளிப்பதிவினை இங்கு காணலாம்:

No comments:

Post a Comment