எதிர்க்கட்சிகள் இல்லாமல் அலரி மாளிகையில் கூட்டம் - sonakar.com

Post Top Ad

Monday 4 May 2020

எதிர்க்கட்சிகள் இல்லாமல் அலரி மாளிகையில் கூட்டம்


ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, த.தே.கூ உட்பட எதிர்க்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச ஏற்பாடு செய்த கூட்டம் அலரி மாளிகையில் தற்போது இடம்பெறுகிறது.

இதில் சுகாதார அதிகாரிகள், ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சின் செயலாளர்கள், பாதுகாப்பு படை முக்கியஸ்தர்கள் மற்றும் கொவிட்-19 செயலணி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றைக் கூட்டுவதற்குப் பதிலாக அலரி மாளிகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து 'கலந்துரையாட' மஹிந்த ராஜபக்ச முயன்றிருந்த நிலையில் அது முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment