வெலிகம பிரதேச சபையில் 'பெரமுனவினரிடையே' சர்ச்சை! - sonakar.com

Post Top Ad

Thursday 28 May 2020

வெலிகம பிரதேச சபையில் 'பெரமுனவினரிடையே' சர்ச்சை!


இரண்டு மாதங்களுக்குப் பின் இன்று கூடியிருந்த வெலிகம பிரதேச சபையில் ஆளும் பெரமுன கட்சியினரிடையே கருத்து மோதல் இடம்பெற்று 11 பேர் கொண்ட குழு சபையை விட்டு வெளியேறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொரோனா சூழ்நிலையில் பிரதேச சபைத் தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட அரிசி விநியோகத்தில் ஊழல் நடந்திருப்பதாக வெளியேறிய குழு தெரிவிக்கிறது.

இதேவேளை, பிரதேச சபை தலைவர் புஷ்பகுமார குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன் மக்களுக்கு எவ்விதத்திலும் பிரயோசனமில்லாத கூட்டமே சபையை விட்டு எழுந்து சென்றதாகவும் அவர்கள் உட்கட்சிப் பூசலை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.



No comments:

Post a Comment