சான்றிதழ் பெற்ற பின்பே சலூன்களை திறக்க முடியும் - sonakar.com

Post Top Ad

Wednesday 6 May 2020

சான்றிதழ் பெற்ற பின்பே சலூன்களை திறக்க முடியும்


கொரோனா சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளின் முனைப்புக் காட்டி வரும் அரசு, அண்மையில் சலூன்களைத் திறக்க அனுமதிக்கப் போவதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பிராந்திய மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் பெற்ற பின்பே அவ்வாறு அனுமதிக்கப் போவதாக தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழ்நிலையில் பாதுகாப்பாக இயங்குவதற்கான விதிமுறைகளைப் பின்பற்றக்கூடிய இடங்களுக்கே இவ்வாறு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment