நேற்று டுபாயிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா - sonakar.com

Post Top Ad

Friday 8 May 2020

நேற்று டுபாயிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா


நேற்றைய தினம் டுபாயிலிருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டிருந்த நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்படை வீரர் ஒருவருடன் தொடர்பிலிருந்த குழந்தையொன்றும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் மேலும் 25 பேர் கடற்படை வீரர்கள் எனவும் நேற்றைய தொற்றாளர்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதுவரையான கொரோனா தொற்றாளர்களுள் பெரும்பான்மையானோர் கடற்படையினர் என்பது ம் தற்சமயம் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 824 என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment