யாழ்: இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் - sonakar.com

Post Top Ad

Friday 15 May 2020

யாழ்: இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்


போக்குவரத்து தடையிருந்த பகுதியில் பாதுகாப்பு படையினரின் கட்டளையையும் மீறி மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்திய நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 23 வயது நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கு வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை வரணி பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment