நேற்றைய தொற்றாளர்களுள் 6 பேர் சுதுவெல்லயைச் சேர்ந்தவர்கள் - sonakar.com

Post Top Ad

Friday 1 May 2020

நேற்றைய தொற்றாளர்களுள் 6 பேர் சுதுவெல்லயைச் சேர்ந்தவர்கள்


நேற்றைய தினம் 16 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்த நிலையில் அதில் ஆறு பேர் ஜாஎல சுதுவெல்லயிலிருந்து தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



இதேவேளை, தாபரே மாவத்தையில் கண்டறியப்பட்ட தொற்றாளரோடு நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவரும் மேறும் 9 வெலிசர கடற்படை முகாமைச் சார்ந்த சிப்பாய்களும் இதில் உள்ளடக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இதுவரை 665 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அதில் 154 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment