கட்டாரிலிருந்து 268 பேர் நாடு திரும்பினர் - sonakar.com

Post Top Ad

Wednesday 27 May 2020

கட்டாரிலிருந்து 268 பேர் நாடு திரும்பினர்


குவைத்திலிருந்து இலங்கை வந்தோர் பெருமளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் தாமதிக்கப்பட்டிருந்த கட்டாரில் முடங்கியிருப்போரை அழைத்து வரும் நடவடிக்கை நேற்றிரவு கை கூடியுள்ளது.

இப்பின்னணியில் இன்று (27) அதிகாலை ஸ்ரீலங்கன் விமானம் ஊடாக 268 பேர் நாட்டுக்கு மீள அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கிருமி நாசினி தெளிப்பின் பின்னர் குறித்த நபர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு கொண்டு சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment