ஹொரன பகுதியிலிருந்து 14 குடும்பங்கள் தனிமைப்படுத்தல் - sonakar.com

Post Top Ad

Saturday 30 May 2020

ஹொரன பகுதியிலிருந்து 14 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்


ஹொரன பகுதிக்கு விஜயம் செய்த இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் அப்பகுதியைச் சேர்ந்த 14 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

செய்தி பரவியதையடுத்து பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள அதேவேளை, மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த இராணுவ சிப்பாய் சென்று வந்ததாகக் கூறப்படும் நான்கு வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment