கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1319 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Tuesday 26 May 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1319 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1319 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பெருமளவில் தொற்றுக்குள்ளாகியுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் 597 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 712 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

தற்போதைய எண்ணிக்கை அடிப்படையில் இன்றைய தினம் 137 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் அதில் 127 பேர் குவைத்திலிருந்து திரும்பியவர்கள் என்பதோடு ஏனைய 10 பேர் கடற்படையினர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை ஒரே நாளில் அதிகளவில் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நாளாக இன்றைய தினம் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment