டிரபிக் OIC குடும்பத்துடன் தனிமைப்படுத்தலில் - sonakar.com

Post Top Ad

Sunday 5 April 2020

டிரபிக் OIC குடும்பத்துடன் தனிமைப்படுத்தலில்



கொழும்பில் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் தனது குடும்பத்தினரை அங்கிருந்து திருகோணமலையில் உள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மறைவாக அழைத்து வந்த திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை குடும்பத்துடன் அதே வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



ஊரடங்கை மீறியே தமது குடும்பத்தினரை குறித்த நபர் அழைத்து வந்திருக்கின்றமை குறித்து தகவல் அறிந்ததன் பின்னணியில் சுகாதார அதிகாரியினால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் குடும்பத்தார் அனைவருடனும் குறித்த நபர் வீட்டில் முடங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment