நிவாரண சர்ச்சை: சமுர்தி அதிகாரியின் வீட்டின் மீது தாக்குதல் - sonakar.com

Post Top Ad

Thursday 9 April 2020

நிவாரண சர்ச்சை: சமுர்தி அதிகாரியின் வீட்டின் மீது தாக்குதல்


தமக்கு சமுர்தி நிவாரணப் பொதி வழங்கப்படவில்லையென குற்றஞ்சாட்டி பெண் சமுர்தி அதிகாரியொருவரின் வீட்டின் மீது இரும்பினால் தாக்கி சேதப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.



ஹிக்கடுவ, பின்கந்தயிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த நபர் சமுர்தி பயனாளி இல்லையெனவும் அவருக்கு நிவாரண பொதி வழங்காதமைக்கு அதுவே காரணம் எனவும் குறித்த அதிகாரி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment