கொழும்பு, கிரான்ட்பாஸ் பகுதியிலிருந்து தனிமைப்படுத்துவதற்காக மக்களை ஏற்றிச் சென்ற பேருந்து வரகாபொல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், இதில் பயணித்த ஒருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுவதால் பிரதேசத்தில் தேடல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
இப்பின்னணியில் வரகாபொல பொலிசார் பிரதேச மக்களின் உதவியையும் நாடியுள்ளமையும் சம்பவத்தில் பலர் காயமுற்றுள்ள நிலையில் வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளமைமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment