கொரோனாவால் உயிரிழந்த ஜனாஸா: குடும்பத்தாருக்கு அழைப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 8 April 2020

கொரோனாவால் உயிரிழந்த ஜனாஸா: குடும்பத்தாருக்கு அழைப்பு


கொரோனாவால் உயிரிழந்த ஏழாவது நபரின் ஜனாஸா இறுதிக் கிரியைகள் நிமித்தம் குடும்பத்தாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.



மார்ச் 31ம் திகதி இலங்கையில் திருத்தி வெளியிடப்பட்ட விதிகளுக்கமைவாக கொரோனா பாதிப்பினால் உயிரிழக்கும் அனைவரது உடல்களும் எரிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த தடவையும் ஜனாஸா தொழுகைக்கு இடமளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பெரும்பாலும் இன்றிரவே இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment