கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோரைக் கண்டறியும் நிமித்தம் கொழும்பு நகரை சில நாட்களுக்கு மூடி வைக்க அரச மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகரில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ள நிலையில் பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்டறிவதற்கு நகரை மூடி வைப்பதே சரியான வழியென உயர் மட்ட அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதன் பின்னணியில் இது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இதுவரை இது குறித்து தீர்க்கமான முடிவொன்றை எட்டவில்லையாயினும் பொலிஸ் நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment