கொரியாவிலிருந்து நாடு திரும்பி, கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் 14 நாட்கள் தங்கியிருந்து வீடு திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அவர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை, மத்துகம பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கடந்த மாதம் 24ம் திகதி வீடு திரும்பியுள்ள நிலையில் இன்று அவருக்கு கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரோடு பேருந்தில் பயணித்த அறுவர் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment