முஸ்லிம் விரோத இனவெறுப்பை உருவாக்கி வளர்க்கும் கேவலமான செயற்பாட்டை அத தெரண தொலைக்காட்சி அரங்கேற்றி வருவதாகவும் இது அருவருக்கத்தக்க செயல் எனவும் விசனம் வெளியிட்டுள்ளார் மங்கள சமரவீர.
அததெரனவின் வாத பிட்டிய எனும் நிகழ்ச்சியின் விளம்பர இடைவேளையின் போது, விளம்பரத்துக்குப் பதிலாக கலையகத்தில் தொகுப்பாளர் மற்றும் பங்கேற்றவர்கள் மேற்கொண்ட முஸ்லிம் விரோத கலந்துரையாடல் தவறுதலாக ஒளிபரப்பாகிய தருணத்தின் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியிருந்ததன் பின்னணியில் மங்கள இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நரக தொலைக்காட்சியின் மேலும் ஒரு அசிங்கம் என அவர் இச்சம்பவத்தினை வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment