வெளி மாவட்டத்தவரை அனுப்ப விசேட ரயில் - பஸ்! - sonakar.com

Post Top Ad

Tuesday 7 April 2020

வெளி மாவட்டத்தவரை அனுப்ப விசேட ரயில் - பஸ்!


கொழும்பில் தங்கியிருக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வீடுகளுக்குத் திருப்பியனுப்ப விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.



கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானித்திற்கேற்ப மருத்துவ பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்ட நபர்களை இவ்வாறு தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கவுள்ளதோடு அதற்கான நடவடிக்கைகள் இவ்வாரமே ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நடவடிக்கை ஊடாக கொழும்பில் சமூக இடைவெளியைப் பேணுதலும் இலகுவாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.a

No comments:

Post a Comment