வார இறுதியில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு! - sonakar.com

Post Top Ad

Thursday 23 April 2020

வார இறுதியில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு!


தற்சமயம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட இடங்கள் உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாளை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை 27ம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இப்பின்னணியில் வார இறுதியில் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது.

இலங்கையில் தற்போது 335 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை அதில் 105 பேர் குணமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. எனினும், புதிதாக பல இடங்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment