கொரோனா சூழ்நிலையில் அரசாங்கம் வழங்கி வரும் 5000 ரூபா கொடுப்பனவை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பாடசாலைக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகன சாரதிகளுக்கும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் மஹிந்த அமரவீர.
முன்னதாக பேருந்து சாரதிகளுக்கு இக்கொடுப்பனவை வழங்க அரசாங்கம் இணங்கியிருந்த நிலையில் இப்பிரிவுக்குள் முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை வாகன சாரதிகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா நிவாரணை நிதியாக அரசாங்கம் இக்கொடுப்பனவை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment