மேலும் 30 கடற்படையினருக்கு தொற்று: கொரோணா எண்ணிக்கை உயர்வு! - sonakar.com

Post Top Ad

Friday 24 April 2020

மேலும் 30 கடற்படையினருக்கு தொற்று: கொரோணா எண்ணிக்கை உயர்வு!


இன்றைய தினம் மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் மொத்தமாக 60 கடற்படையினர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியள்ளனர்.



ஜாஎல சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தலைத் தவிர்த்து ஒளித்துத் திரிந்த நபர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே கடற்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக இராணுவ தளபதி நேற்றைய தினம் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 60 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளமையும் பல இடங்களில் விடுமுறைக்காக சென்றுள்ள சிப்பாய்கள் மற்றும் உறவினர்களது வீடுகளும் முடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது மொத்த எண்ணிக்கை 409 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment