இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது.
தம்பதிவ சென்று திரும்பிய பெண்ணொருவர் வாழ்ந்த, கொழும்பு - புதுக்கடை, பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து நேற்றைய தினம் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தோரில் புதிதாக 24 பேருக்கு வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
96 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment