29 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்! - sonakar.com

Post Top Ad

Sunday 5 April 2020

29 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!


கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



இலங்கையில் இதுவரை 166 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ள அதேவேளை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 2000க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ள அதேவேளை நேற்றைய தினம் அவ்வாறு வீடு திரும்பிய நபர் ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.

மேலும் 259 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment