UK - நோர்வேயிலிருந்தும் இலங்கை வரத் தடை - sonakar.com

Post Top Ad

Sunday 15 March 2020

UK - நோர்வேயிலிருந்தும் இலங்கை வரத் தடை


ஐக்கிய இராச்சியம், நோர்வே மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளிலிருந்து இலங்கை வர இரு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


குறித்த நாடுகளிலிருந்து இன்று பிரயாணத்தை ஆரம்பித்து, நாளைய தினம் கொழும்பு வருபவர்கள் கண்காணிப்பு மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இத்தடை இரு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் ஏலவே எட்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வரத் தடை அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை 'சீனா' தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment