பதுளை மாவட்டத்தின் முக்கிய நகரங்களான பண்டாரவளை, வெலிமடை, ஹப்புத்தளை மற்றும் தியதலாவயை திங்கள் முதல் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகருக்குள் நுழையவோ, வெளியேறவோ பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிற நகரங்களுக்கு உணவுப் பதார்த்தங்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பரவலின் பின்னணியில் பல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment