ஏப்ரல் இறுதியில் பொதுத் தேர்தல் நடாத்தப்பட மாட்டாது என வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை மே மாதம் நடுப்பகுதியளவிலேயே தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 14ம் திகதியளவில் இவ்வறிவிப்பினை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏலவே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கொரோனா அபாய சூழ்நிலையில் பின்னணியில் தேர்தல் பின்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment