கண்டி: பெரமுனவினர் வேட்பு மனுத் தாக்கல் - sonakar.com

Post Top Ad

Tuesday 17 March 2020

கண்டி: பெரமுனவினர் வேட்பு மனுத் தாக்கல்


நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி வேட்பு மனுவினை இன்று கண்டி மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர். 


கண்டி மாவட்ட அமைப்பாளர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் கண்டி மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

இம்மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் வேட்பாளர்களான லொஹான் ரத்வத்த கெஹெலிய ரம்புக்வெல சரத் ஏக்க, ஏ. எல். எம் பாரிஸ் அருள் சாமி பாரத் முதலியவர்கள் கலந்து கொண்டதை இங்கு படங்களில் காணலாம்.

-இக்பால் அலி 



No comments:

Post a Comment